கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா நடக்கவுள்ளது. மைதானம் நேற்று போலீஸ் பாதுகாப்பில் மைதானம் ஒப்படைக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை போலீசார் மைதானத்தில் சோதனை நடத்தி வருகின்றனர் .கோவை ரயில் நிலையத்தின் 6 பிளாட்பாரங்களிலும், பார்சல் பிரிவிலும் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள்.