ஈரோடு: ஈரோட்டில் மாவட்ட அளவிலான திருக்குறள் பேச்சுப்போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். மாணவ சமுதாயத்தினரிடையே திருக்குறளின் கருத்துகளை பரப்பவும், தமிழாற்றலை வளர்க்கும் வகையிலும் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீராம் இலக்கிய கழகத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான திருக்குறள் பேச்சுப்போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மண்டல மேலாளர் பாஸ்கர் வரவேற்புரையாற்றினார். ஜவுளி மற்றும் ஆடைகள் சங்க செயலாளர் சிவானந்தன் முன்னிலை வகித்தார். வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மற்றும் தாளாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.