ஈரோடு: ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே குருமந்தூர் கோபி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தீபன் (59). இவர் கடந்த 11ம் தேதி இரவு தனது பைக்கில் சத்தி அருகே மூலக்கிணறு என்ற இடத்தில் தனது நண்பர் சந்திரனை பார்க்க சென்றுள்ளார். பின்னர் சந்திரனை பார்த்து விட்டு பைக்கில் சத்தி-கோபி மெயின் ரோட்டில் அரசூர் விவசாய கூட்டுறவு வங்கி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது.