சென்னை, ஆக. 14: பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். திருக்கழுக்குன்றம் அருகே நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருக்கழுக்குன்றம் அடுத்த எலுமிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரதிப்ராஜ் (19). இவர், ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் சவுமியா (17). இவர், பிளஸ் 2 முடித்து விட்டு கல்லூரியில் சேர முயற்சித்து வந்தார். பிரதிப்ராஜும், சவுமியாவும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்து கொண்டனர். நாளடைவில் இது காதலமாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனம் உடைந்த காதலர்கள், பெற்றோர் எதிர்ப்பை மீறி நாம் வாழ்கையில் ஒன்றாக சேர முடியாது, மரணத்திலாவது ஒன்று சேருவோம் என்று எண்ணி தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இருவரையும் காணவில்லையே என இரு வீட்டின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். கிடைக்கவில்லை.