பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி

கும்மிடிப்பூண்டி, ஆக. 14: புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, தயாநிதி தலைமை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு, முருகேசன், சசி முன்னிலை வகித்தனர். ஊராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதில், துப்பரவு தொழிலாளர், பொதுமக்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், அதை தவிர்ப்பதன் அவசியம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திபடி சென்று, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.

Related Stories: