செய்யூர், ஆக. 14:லத்தூர் ஒன்றிய தி.மு.க சார்பில் தி.மு.க தலைவர் மறைவை ஒட்டி பவுஞ்சூரில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி இறந்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் செய்யூர் தொகுதி லத்தூர் ஒன்றிய தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் நடத்தினர். இலத்தூர் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ராமசந்திரன் தலைமையில், பவுஞ்சூர் பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைதி ஊர்வலத்தை செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு துவக்கி வைத்தார். ஊர்வலமானது பவுஞ்சூர் பஜார் வீதி, கூவத்தூர் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது.