செங்கல்பட்டு, ஆக. 14: மறைமலைநகர் அருகே மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் மன்னார் (52). இவர், தனது குடும்பத்துடன் மறைமலைநகர் அடுத்த வல்லாஞ்சேரி கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி, செங்கல்பட்டு அடுத்த ரெட்டிபாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவரது மகன் பாலாஜி (30), சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். தினசரி காலை வீட்டில் இருந்து மொபட்டில் செங்கல் சூளைக்கு புறப்படும் மன்னார், தனது மகனை உடன் அழைத்து சென்று மறைமலைநகர் பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டு செல்வது வழக்கம். அதன்படி, நேற்று காலை வழக்கம்போல் தந்தையும், மகனும் வீட்டில் இருந்து மொபட்டில் புறப்பட்டனர். பாலாஜி மொபட்டை ஓட்டினார். மன்னார் பின்னால் அமர்ந்து சென்றார்.