ராசிபுரம், ஆக.14: 2016-2017ம் கல்வியாண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் உயர்கல்விக்கான, தெற்கு ஆசியாவின் முதல் 25 பயிற்சி மையங்களில் பாவை கல்வி நிறுவனங்களும் ஒன்றாக தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி, ஆங்கில மொழியில் மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் சிறந்த வல்லுநர்களாக திகழவேண்டும் என்ற நோக்கத்துடன் பிசினஸ் இங்கிலீஷ் சர்டிபிகேட், இங்கிலீஷ் கார்னர், அயல்நாட்டு பயிற்சி மையம் போன்றவைகள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறது. இதில் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பிசினஸ் இங்கிலீஷ் சர்டிபிகேட் படிப்பை, கடந்த பத்து ஆண்டுகளாக பாவை கல்வி நிறுவனம் நடத்தி, பன்னாட்டு அளவில் பயன்படும் சான்றிதழை வழங்கி வருகிறது. கடந்த 2016-2017ம் கல்வியாண்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின், உயர் கல்விக்கான தெற்கு ஆசியாவின் முதல் 25 பயிற்சி மையங்களில், ராசிபுரம் பாவை கல்வி நிறுவனமும் ஒன்றாக தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளது.