கன்னியாகுமரி, ஆக. 14: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் மழை மற்றும் காற்று காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி கடலில் நேற்று காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. கடற்கரையில் இருந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் தெளிவாக பார்க்க முடியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டது. பனிமூட்டம் மற்றும் கருமேகம் காரணமாக நேற்று காலை சூரிய உதயம் தெரியவில்லை.