மார்த்தாண்டம், ஆக. 14: வருவாய்த்துறை பறக்கும்படை தனி வட்டாட்சியர் ராஜசேகர் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. அதனை படந்தாலூமூடு சோதனைச்வாடியில் மடக்கி பிடித்தனர். காரை சோதனை செய்த போது சாக்கு மூட்டைகளில் சுமார் 700 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து காருடன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆட்டோ டிரைவர் மற்றும் ஆட்ேடாவில் இருந்த இன்னொருவரையும் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.