பண்ருட்டி, ஆக. 14: பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்த மாயவன் மகன் சரவணன் (35). இவர் கடந்த 10ம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்றுள்ளார். அங்கு சிகரெட் வாங்கி அருகில் நின்றுகொண்டு புகைத்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சோலையப்பன் மகன் ஞானசேகர் (35) என்பவர் சரவணனிடம் ஏன் இங்கு நின்று சிகரெட் பிடிக்கிறாய்? என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஞானசேகர், சரவணனின் மூக்கில் கையால் குத்தியதோடு இல்லாமல் அவரது வலது காதையும் கத்தியால் அறுத்துவிட்டு ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.