நாகர்கோவில், ஆக.13 : கன்னியாகுமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகளிலும் வரும் சுதந்திர தினவிழாவன்று கிராமசபா கூட்டம் நடக்கும் என்று கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே அறிவித்துள்ளார். குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம். வடேநேரே விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சுதந்திரதினமான வருகிற 15ம் தேதி குமரி மாவட்டத்துக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டம் உட்பட அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.