விருத்தாசலம், ஆக. 13: விருத்தாசலம் அடுத்த ஆலடி பாலக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி மனைவி சின்னம்மாள்(50). இவர் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து பாலக்கொல்லை வரும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். பாலக்கொல்லை பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது முன்பக்க படிக்கட்டு வழியாக இறங்கியுள்ளார். இதனை பார்க்காமல் அஜாக்கிரதையாக பேருந்தை பின்பக்கமாக இயக்கியுள்ளார். அப்போது தவறி கீழே விழுந்த சின்னம்மாளின் காலில், பேருந்தின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது.