காவிரி ஆற்றில் கடந்த 2 நாட்களாக வெள்ளத்தின் அளவு அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, 4 நாட்களாக நகராட்சி நிர்வாகம் தண்டோரா மூலமும், ஒலிப்பெருக்கி வாயிலாகவும் எச்சரிக்கை அறிவிப்பை மேற்கொண்டுள்ளது. மேலும், வெள்ளம் புகுந்த வீடுகளில் வசித்தவர்கள் பலரும், தங்கள் உடமைகளை நிவாரண முகாமில் வைத்து விட்டு வீடுகள் இருக்கும் பகுதியிலேயே நடமாடி வருகின்றனர்.