ராசிபுரம், ஆக.13: நாமகிரிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ராசிபுரம் ராயல் ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். திட்ட சேர்மேன் ராஜூ வரவேற்றார். கிளப் நிர்வாகிகள் இளஞ்செழியன், கார்த்திகேயன், ரமேஷ், ரவிக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நாமகிரிப்பேட்டை வட்டார தலைமை மருத்துவர் தயாசங்கர் கலந்து கொண்டு தாய்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து பேசினார்.