தர்மபுரி, ஆக.13: பாலக்கோடு, பென்னாகரம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து தர்மபுரி, பாலக்கோடு, ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 50டன் அளவிற்கு தக்காளி அறுவடை நடக்கிறது.