பாபநாசத்தில் பருத்தி ஏலம் 610 குவிண்டால் விற்பனை

பாபநாசம், ஆக. 13:  பாபநாசத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் 610 குவிண்டால் விற்பனை செய்யப்பட்டது. பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 500 விவசாயிகள் 610 குவிண்டால் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். 7 வியாபாரிகள் பங்கேற்றனர். இதில் ரூ.38.12 லட்சம் மதிப்புள்ள பருத்தி ஏலம்போனது. அதிகபட்சமாக குவிண்டால் ரூ.6,332, குறைந்தபட்சமாக ரூ.5,839, சராசரியாக ரூ.6,250க்கு ஏலம் போனது.

Related Stories: