விளாத்திகுளம், ஆக. 13: விளாத்திகுளம் அருகே கமலாபுரத்தில் கோயில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரத்தில் உள்ள வடக்குவாச் செல்லியம்மன், துர்க்கையம்மன் கோயிலில் பொங்கல் விழா, கடந்த திங்களன்று தொடங்கியது. காலை 10.30 மணிக்கு முத்திபரிதரித்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு அக்னிசட்டி எடுத்து ஊர்வலம் நடைபெற்றது.