தூத்துக்குடி, ஆக.13: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 8 மாதத்தில் 31 பேர் குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்கள், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.கடந்த மே மாதம் 22ம் தேதி நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 7 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.