வேலூர், ஆக.13: வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற 2ம் நிலை காவலருக்கான போட்டித்தேர்வில் 1,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விரைவில் உடற்தகுதி தேர்வு நடக்க உள்ளது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் மூலம் காவல்துறையில் ஆயுதப்படை பிரிவில் 5 ஆயிரத்து 538 காலி பணியிடத்திற்கு 2ம் நிலை காவலர்கள், சிறைத்துறையில் 340 பேர், 2ம் நிலை சிறைக்காவலர்கள், தீயணைப்பு துறையில் 216 பேர் உட்பட மொத்தம் 6 ஆயிரத்து 140 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.