சிறை வார்டனிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது

திருப்பூர், ஆக.7: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் பால்பாண்டியன் (24). இவர், பொள்ளாச்சியில் உள்ள கிளை சிறையில் வார்டனாக உள்ளார்.திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு நேற்றுமுன்தினம் காலை பொள்ளாச்சிக்கு இவர் புறப்பட்டார்.  திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு டவுன் பஸ்சில் ஏறி வந்தார். அப்போது  பால்பாண்டிக்கு அருகே நின்று பஸ்சில் பயணம் செய்த 2 பேர், அவர் சட்டைப்பையில் வைத்திருந்த செல்போனை திருடிவிட்டு தப்பி ஓட முயன்றனர்.அதற்குள் பால்பாண்டி சத்தம் போடவே சக பயணிகள் பிடித்து 2 பேரையும் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த கபீர் (32), அவருடைய நண்பரான முருகேஸ் (31) என தெரியவந்தது.

Related Stories: