காமாட்சியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

வேதாரண்யம், ஜூன் 21: வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில் திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. இதைதொடர்ந்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

இதைதொடர்ந்து நேற்று பால்குட விழா, தீமிதி திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் வரதராஜன், அருளானந்தன், ராமச்சந்திரன், சுப்பிரமணியன், சரவணகுமார், கணேசன், துரைராசு மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: