மதுரை, ஜூன் 21: வைகைக்கரை சாலையில் அழுகிய மாம்பழங்களை குவித்து வைத்திருப்பதால், சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மதுரையில் யானைக்கல், சிம்மக்கல் பகுதிகளில் பழக்கடைகள் அதிகமாக உள்ளன. மாம்பழ சீசனையொட்டி கார்பைடு கல்லால் பழுக்க வைத்த மாம்பழங்களையும் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இத்தகைய மாம்பழங்களை உடனடியாக விற்று விட வேண்டும். இல்லையெனில் சில நாட்களில் அவைகள் அழுகிவிடும். இந்நிலையில், வைகை தென்கரை சாலையில் அழுகிய மாம்பழங்களை குவித்து வைத்துள்ளனர்.