உசிலம்பட்டி, ஜூன் 21: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உசிலம்பட்டி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘தொழிற்சங்க விரோதப் போக்கை கைவிடுதல், அடிப்படை மனித உரிமை பறிப்பு, விடுப்பு விதிகளுக்கு மாறாக ஊதியம் பிடித்தம் செய்தல், சாலைப்பணியாளர்களை பழிவாங்கும் வகையில் பணிமாறுதல் உத்தரவு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். சாலை பணியாளர்களுக்கு எதிராக செயல்படும் திருச்சி வட்ட கண்காணிப்பாளர், பழநி மற்றும் புதுக்கோட்டை கோட்ட பொறியாளர் சேதுபதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி மாறுதலை திரும்ப பெற வேண்டும் மற்றும் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தினர்.