குடியாத்தம் அருகே காட்டு பன்றி வேட்டையாடி இறைச்சி சமைத்த 3 பேர் கைது

குடியாத்தம் ஜூன் 21: குடியாத்தம் அடுத்த அனுப்பு வனபகுதியில் காட்டு பன்றி வேட்டையாடி சமைத்து கொண்டு இருப்பதாக குடியாத்தம் வனதுறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன்படி நேற்று காலை குடியாத்தம் வனதுறையினர் அனுப்பு வனகாட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காட்டு பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து கொண்டு இருந்த குடியாத்தம் அடுத்த கே.மோட்டுரை சேர்ந்த நந்தகுமார்(51), சபாபதி(40), பார்த்திபன்(33) ஆகிய 3 பேரை பிடித்தனர்.

இதுகுறித்து வனத்துைறயினர் வழக்குப்பதிந்து அவர்களிடம் இருந்த 15 கிலோ பன்றி இறைச்சி மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: