சிதம்பரம், ஜூன் 18: கொள்ளிடம் ஆற்றில் இறால் பிடிக்க சென்ற மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் அருகே தொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி பாப்பா (64). இவர் கடந்த 15ம் தேதி கொள்ளிடம் ஆற்றில் இறால் பிடிக்க சென்றுள்ளார். ஆற்றில் இறங்கி இறால் பிடித்துக் கொண்டிருந்த போது ஆற்றின் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது சடலம், கொள்ளிடம் ஆற்றின் வடபுறம் கரை ஒதுங்கியது.