அரியலூர், ஜூன் 16: அரியலூரில் ரத்ததான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் விஜயலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அரியலூர் நகராட்சி அலுவலகம் அருகே உலக ரத்த நன்கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவியர் பங்கேற்ற ரத்ததான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த ேபரணியை கொடியசைத்து துவக்கி வைத்து கலெக்டர் விஜயலட்சுமி கூறியதாவது: அரியலூர் மாவட்டத்தில் 2017ம் ஆண்டில் அதிக முறை ரத்த தானம் கொடுத்த 12 பேருக்கும், ரத்ததான முகாம் ஏற்பாடு செய்த 9 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது ரத்த தானத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை. ரத்ததானம் செய்வதால், உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.