பிளஸ்2 வில் 4 பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அசத்தல்

ஜெயங்கொண்டம் மே7: தமிழக முழுவதும் நடந்து முடிந்த பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ். இவர் அருகிலுள்ள வேத்தியார்வெட்டு கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் நவீனா ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவர் கணிதம், இயற்பியல், வேதியல் உயிரியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அசத்தினார். தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் தலா 98 மதிப்பெண்கள் மட்டும் பெற்றார். நவீனா விற்கும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷுக்கும் அரியலூர் மாவட்டம் முழுதிலிருந்தும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

The post பிளஸ்2 வில் 4 பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: