சென்னை: ராயப்பேட்டை அமமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நடந்த நீண்ட சட்டப்போராட்டம், இன்னும் இந்த போராட்டம் முடியவில்லை. ஓபிஎஸ் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்துவார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜ, காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சிகள் இருக்கின்றன. அவர்களில் யாருடனாவது கூட்டணி வைப்போம், அது சாத்தியமில்லை என்ற நிலை வந்தால் தனியாகவும் போடியிடுவோம். அதிமுகவில் இன்னும் மியூசிக்கல் சேர் போட்டி நடக்கிறது. இதுவரை பழனிசாமி வாலியை போல வெற்றி பெற்று இருக்கிறார். ராமாயணத்தில் வாலி வில்லன் கதாபாத்திரம், சுக்ரீவனின் ராஜ்யம் மற்றும் மனைவியை அபகரித்தவர்.