ஈத்தாமொழி, மே 26: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று ராஜாக்கமங்கலம் துறையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம்துறை தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நேற்று சிறப்பு திருப்பலி நடந்தது. பங்குதந்தை ராஜ் திருப்பலி நடத்தினார். பங்குபேரவை துணை தலைவர் ஆல்பின், செயலாளர் மில்டன், துணை செயலாளர் சிலுவை தாசன், பொருளாளர் சேவியர், திமுக மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் ஜெயசீலன், சிலுவைராஜன், பிலிப் மற்றும் பங்குமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலய கலையரங்கில், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் போர்டு வைத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.