கைதிகளின் பல்லை பிடுங்கி சித்ரவதை காவல்துறை அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், தமது காவல்பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிக் கொடுமைப்படுத்தியதாககிடைத்த செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இவை காவல் நிலையங்களில் இதுவரை கேள்விப்படாத காட்டுமிராண்டித்தனமான செயல்களாகும்.

பெருமைக்குரிய இந்திய காவல் பணி நிலையில் உள்ள ஓர் அலுவலரின் இச்செயல்கள் கடுமையான குற்றச் செயல்களாகும். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த அலுவலரை காத்திருப்போர் பட்டிலில் வைத்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் அறிவித்துள்ளார். இவரது நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விசாரித்து, பாதிக்கப்பட்டோரிடம் புகார்கள் பெற்று, இவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: