கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோடை வெப்பம் தொடங்குவதற்கு முன்பே சதம் அடித்த வெயிலால் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கானல் நீர் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். அரவக்குறிச்சி அருகே பரமத்தி பகுதியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. மிதமான வெயில் அடிக்க வேண்டிய இந்த காலத்தில் அக்னி நட்சத்திரம் போல் வெயில் சுட்டெரிக்கிறது என்று மக்கள் கூறுகின்றனர். கொளுத்தும் வெயிலால் கரூர், கோவை தேசிய நெடுஞ்சாலையில் அனல் காற்று வீசுகிறது.