சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டர் பதிவு: கச்சத்தீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பது, சிங்களமயமாக்கும் செயல். மத நல்லிணக்கத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இவற்றையும் கடந்து புத்தர் சிலை வழிபாடு என்ற பெயரில் சிங்களர்களையும், சீனர்களையும் கச்சத்தீவில் முகாமிடச் செய்து, தென்னிந்தியாவை உளவு பார்ப்பதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும். எனவே, இலங்கையை கண்டிக்க வேண்டும்.