சென்னை: ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளி குழந்தையை தாக்கியதாக கூறி கடந்த 21ம் தேதி குழந்தையின் குடும்பத்தினர் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆசிரியர் ஒருவரை காலணியால் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்ற அரசின் உத்தரவை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்.