புதுடெல்லி: ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரண்டு நாள் பயணமாக இன்று காலை தலைநகர் டெல்லி வந்தார். அவரை ஒன்றிய அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, சர்வதேச சவால்களை எதிர்கொள்ளுதல், இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு திட்டங்கள், உறவுகள், இந்தோ-பசிபிக் தொடர்பான புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.