ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புதிதாக 19 மாவட்டங்களை உருவாக்கி முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் அசோக் கெலாட் 19 புதிய மாவட்டங்கள், 3 புதிய கோட்டங்கள் பற்றிய அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.