புதுடெல்லி: ராகுல்காந்தி தனது லண்டன் சுற்றுப்பயணத்தில் சீனாவை பாராட்டும் போது இந்தியாவை இகழ்ச்சி செய்கிறார் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்தார். டெல்லியில் நடந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: ஒரு இந்திய குடிமகனாக, யாரோ ஒருவர் சீனாவை பாராட்டுவதையும், இந்தியாவை நிராகரிப்பதையும் பார்க்கும்போது நான் கவலையடைகிறேன் சீனா மிகப்பெரிய உற்பத்தியாளர் எனறு அவர் பாராட்டுகிறார்.