டெல்லி: அதானி விவகாரம் பற்றி கூட்டுக் குழு விசாரணை தேவை என்ற கோரிக்கையை திசை திருப்பவே ஒன்றிய அரசு நாடகம் அரங்கேற்றுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதானி பயன்பெற வேண்டும் என்பதற்காகவே விதிகள் திருத்தப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
