வறுமையால் ஆடுமேய்க்க ரூ.50000க்கு சிறுவர்களை அடகு வைத்த கொடுமை

திருவிடைமருதூர்:தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த வண்ணக்குடியை சேர்ந்த தம்பதிக்கு 3 மகன்கள், 2 மகள்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் இறந்ததால், மனைவியால்  5 குழந்தைகளுடன் குடும்பம் நடத்த வருமானம் இல்லாமல் வறுமையில் கஷ்டப்பட்டார். இதனால், திருவிடைமருதூர் பகுதியில் ஆட்டுக்கிடை அமைத்து ஆடுகளை மேய்த்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ராமலிங்கபுரத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரிடம், 50 ஆயிரத்துக்கு 12வயதான மூத்த மகன், 8வயதான 2வது மகன் ஆகிய இருவரையும் அந்த பெண் அடகு வைத்து உள்ளார். . இந்நிலையில் 3 ஆண்டு அடகு காலம் முடிந்ததால் மீண்டும் அடகு வைப்பதற்கு முயற்சித்துள்ளார்.இதையறிந்த தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் 2 குழந்தைகளையும் மீட்டு அரசு குழந்தைகள் இல்லத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: