வதோதரா: நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு குஜராத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எச்3என்2 எனப்படும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், முதியோரை அதிகளவில் தாக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதனிடையே, ஒன்றிய சுகாதார அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், `ஜனவரி 2 முதல் மார்ச் 5 வரை நாடு முழுவதும் 451 பேருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.