திருவொற்றியூர்: ராயபுரம் அப்பயர் தெருவைச் சேர்ந்தவர் குமரன். இவருடைய மகள் ரேகா (22). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் 17ம் தேதி இன்ஸ்டாகிராம் மூலம் பழவந்தாங்கல் நேரு காலனி 18வது தெருவைச் சேர்ந்த உமாமகேஸ்வரி (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. உமா மகேஸ்ரி சிசிடிவி இன்ஸ்டால் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உமாமகேஸ்வரி தனக்கு பணம் தேவைப்படுவதாக ரேகாவிடம் கேட்டுள்ளார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணத்தை ஜிபே, போன் பே மூலம் உமாமகேஸ்வரிக்கு ரேகா அனுப்பி வைத்துள்ளார்.