ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக், புல்வாமா, சோபியான் ஆகிய மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது உள்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக என்ஐஏ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.