சென்னை: கடலூர் முதுநகரில் சிங்காரத்தோப்பு, சோனங்குப்பம், அக்கரைகோரி ஆகிய 3 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை கரையோரம் நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவில் முதுநகர் துறைமுகம் பகுதியில் நிறுத்தியிருந்த 8 பைபர் படகுகள் தீப்பிடித்து எரிந்தது. தகவலநிந்து மீனவர்கள் சென்று தீயை அணைத்தனர். தகவலறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இந்த பைபர் படகுகளுக்கு தீ வைத்தது யார்? எதற்காக இந்த சதி வேலையில் ஈடுபட்டனர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மீன்வளத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
