அகமதாபாத்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் கடைசி டெஸ்ட் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தை இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் பார்த்து ரசித்தனர். இந்நிலையில் நேற்றைய முதல்நாள் ஆட்டத்தை ஒரு லட்சம் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர். இதன் மூலம் மைதானத்திற்கு அதிக ரசிகர்கள் வந்து கிரிக்கெட்டை பார்த்த சாதனையை அகமதாபாத் ஸ்டேடியம் படைத்துள்ளது.