கவுகாத்தி: அசாமில் பாகிஸ்தான் ஏஜென்டுகளுக்கு சிம் கார்டு விற்றதான குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அசாமில் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளை வாங்கி பாகிஸ்தான் ஏஜென்டுகளுக்கு விற்பதாக ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் மாநில போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, நாகோன் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாம், உத்தின், ரஹ்மான், ஜமான் மற்றும் மோரிகான் மாவட்டத்தை சேர்ந்த பாருல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மீதமுள்ள 5 பேர் தலைமறைவாகி உள்ளனர்.