புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தொடர்புடைய தெலங்கானா தொழிலதிபர் அருண் ராமச்சந்திர பிள்ளையை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்தனர். டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. சிபிஐ கஸ்டடி விசாரணை முடிவுற்ற நிலையில் அவர் டெல்லி சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். இன்று அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இதே வழக்கில் தொடர்புடைய தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண் ராமச்சந்திர பிள்ளை என்பவரை நேற்றிரவு 11 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.