அய்யலூர் : அய்யலூர் பகுதியில் மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே ஸ்ரீரங்க கவுண்டனூர், தோப்புப்பட்டி, பாலக்குறிச்சி, பாண்டியனூர், வடுகபட்டி, சித்துவார்பட்டி உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம விலங்குகள், பட்டிகளுக்குள் நுழைந்து ஆடுகளை கடித்து ரத்தங்களை குடித்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வடுகபட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் முருகன், முனியாண்டி, பெருமாள் ஆகியோரது பட்டிக்குள் புகுந்து மர்ம விலங்குகள், ஆடுகளை கடித்து குதறின. இதில் சம்பவ இடத்திலேயே 10 ஆடுகள் இறந்தன.
