இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான்கட்சி பதவி விலகிய பிறகு எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய அரசை உருவாக்கின. பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். இந்த கூட்டணி அரசில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் உள்ளது. அந்த கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் சிந்து மாகாணத்தில் கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காவிட்டால் கூட்டணி அரசில் நீடிப்பது கடினம் என்று தெரிவித்து உள்ளார்.