கராச்சி: பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 போலீசார் பலியாகினர். பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தின் சிபி மாவட்டத்தில் நடந்த விழாவில் பாதுகாப்பு பணியை முடித்து விட்டு போலீசார் ட்ரக்கில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது குவெட்டா-சிபி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காம்ப்ரி பாலம் அருகே வந்த போது போலீஸ் வாகனம் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.