அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகளில் 32 தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. முதல்வர் மாணிக் சாஹா நேற்று முன்தினம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், பாஜ தலைமையிலான புதிய அரசு வருகின்ற 8ம் தேதி பதவியேற்கின்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.